வெள்ளை வெயில்,
புழுதி காற்று,
மஞ்சளும் குங்குமமும்,
கலந்த கோவில் வாசனை..
தெருவுக்கு ஒரு புன்னகை..
...குசலம் விசாரிக்க பந்தங்கள்..
எடை கணிக்க சொந்தங்கள்..
கடந்த காலம் கடத்தி வரும் நட்புகள்..
ரசித்து கொண்டே பார்க்கும் அம்மா..
பார்த்து கொண்டே ரசிக்கும் அம்மா..
அனைத்தும் தொலைத்தேன்..
கத்தை கத்தையாய் சம்பாதித்த ருபாய் தாளில்..
பல ஆயிரம் மைல் தொலைவில்...
-உங்கள் தோழன்..
No comments:
Post a Comment